மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் போராடுங்கப்பா.. அதிமுகவினருக்கு தா.பா. ஆலோசனை!
திருவாரூர்: ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், மக்களுக்கும், பொதுச் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 4 ஆண்டு சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பைப் பொருத்த வகையில் சரியா, தவறா, நியாயமா என்பதையெல்லாம் ஜெயலலிதா தரப்பில் செய்யப்படும் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் விசாரித்து விளக்கம் தெரிவிக்கும்.
ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மக்களுக்கும், பொதுச்சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை பாதுகாப்பு நலன் கருதி அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் விருப்பம் தெரிவிக்கும் மருத்துவமனைக்கு மாற்றலாம் அல்லது தமிழக சிறைக்கு மாற்றலாம் என்ற கருத்தை தெரிவித்துள்ளார். எனவே, ஜெயலலிதாவின் உடல் நிலையின் காரணமாக அவரை வேறு இடத்துக்கு மாற்ற நீதிமன்றமே கவனித்து ஆணையிட வேண்டும் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications