தான் உற்சவ்.. சச்சின், அமிதாப் ஆதரவு.. இல்லாதவருக்கு ஏதாவது செய்ய கைகோருங்கள்!
சென்னை: தான்உற்சவ் என்பது கொடுப்பதை உருவாக்கும் ஒரு நிகழ்ச்சி. அவரவர்கள் தங்களுக்கு விருப்பமானதை கொடுக்கும் நிகழ்ச்சி. நேரத்தையோ, பொருளையோ, பணத்தையோ, திறமையையோ தேவைப்படுவோருக்கு தரலாம்.
2018ம் ஆண்டு தான்உற்சவின் 10வது ஆண்டு விழாவாகும். ஆலியா பட், அமிதாப் பச்சன், அனு அகா, அஜிம் பிரேம்ஜி, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சாவி ராஜ்வத், டாக்டர் தேவி ஷெட்டி, லதா மங்கஷ்கர், மேரி கோம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இதில் இணைகிறார்கள்.

சாமானியர்கள் 10 பேர், தங்கள் வாழ்நாளில் சம்பாதிக்கும் சொத்துக்களில் பாதியை தானமாக வழங்க முன் வருவதாக கூறியுள்ளனர். ஆயிரக்கணக்கான கார்பொரேட்டுகள், என்ஜிஓக்கள், பள்ளிகள், கல்லூரிகள், கம்யூனிட்டிகள், சங்கங்கள் அவ்வளவு ஏன் அரசு துறையினர் கூட இந்த திருவிழாவை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
மும்பையிலுள்ள ஆர்ட் பாடசாலை சுற்றுச்சூழல் மற்றும் காகித பை தயாரிப்பு மற்றும் நன்கொடை குறித்து கற்றுத்தருவார்கள்.
டெல்லியில், என்ஜிஓக்களை சேர்ந்த பலர், மக்களுக்கு விழிப்புணர்வு தருவார்கள். பெங்களூரில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்ய உதவுவார்கள். சென்னையில், 5000 சுகாதார ஊழியர்களுக்கு, 'ஏழை சாப்பாடு' என்ற பெயரில், மதிய சாப்பாடு வழங்கப்படுகிறது.
இந்தியா முழுக்க அக்டோபர் 2ம் தேதி முதல் 8ம் தேதிவரை, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே நீங்கள் அனைவருமே நண்பர்கள், உடன் வேலை பார்ப்போர், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோருடன் இணைந்து நீங்களும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.












Click it and Unblock the Notifications