குற்றாலம் குளிக்கப் போறீங்களா? ஹெல்மெட்டோட போங்கப்பா...
குற்றாலம்: குற்றாலத்தில் குளிக்கப் போகிறவர்கள் இனி ஹெல்மெட்டுடன்தான் போகவேண்டிடும் போலிருக்கிறது. ஏனெனில்
மெயினருவியின் மேல் பகுதியில் ஆபத்தான கற்கள் குவிந்து கிடப்பதால் குளிக்கும் பயணிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அருவிகள் நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டும். மூலிகை மணம் நிறைந்த அருவி நீரில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மெயினருவி பல ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த இயற்கையான அருவி ஆகும். இந்த அருவியின் பிரமண்டத்தை பார்த்து அதிசயிக்காத சுற்றுலா பயணிகளே இல்லை என்று கூறலாம். சுமார் 50 அடிக்கும் மேல் உயரம் கொண்ட இந்த அருவியில் தண்ணீர் விழுந்த போதிலும் இதில் குளிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இயற்கையான அருவி
தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இல்லாத அளவுக்கு பாறையின வடிவம் இயற்கையாக அமைந்துள்ளதே இதற்கு காரணம. எத்தனையோ இடங்களில் உயரமான அருவிகள் இருந்தாலும் தண்ணீர் ஓரே அடியாக மேலிருந்து கீழே கொட்டுவதால் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

பொங்குமாங்கடல்
குற்றாலம் மேலே உள்ள பொங்குமாங்கடல் என்னும் பகுதி தண்ணீரின் வேகத்தை கட்டுபடுத்தி பின்னர் பாறையில் வழித்தோடி அருவியாக கொட்டும் வண்ணம் இயற்கையாக அமைந்துள்ளது.

பாறை நிறைந்த அருவிகள்
இந்த பொங்குமாங்கடல் பகுதியில் 1992ம் வருடம் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது அடித்து வரப்பட்ட கற்கள் குவிந்து கிடக்கின்றன.
இந்த கற்கள் தண்ணீர் அதிகமாக விழும் காலத்திலோ அல்லது காற்று அதிகமாக வீசும் காலத்திலோ திடீரென்று கீழே விழுகின்றன.

சுற்றுலா பயணி பலி
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொங்குமாங்கடலில் இருந்து கீழே விழுந்த கல் ஒன்று மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி பாலகிருஷ்ணன் என்பவரது தலையில் விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அச்சத்தில் பயணிகள்
இதன் பிறகும் பொங்குமாங்கடல் பகுதியில் விழுந்து கிடக்கும் பாறை துண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தூங்கி வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு குளித்து வருகின்றனர்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications