பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: தயாநிதிமாறனின் செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜாமீன்
சென்னை: சன் தொலைகாட்சிக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதி வேக தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

தயாநிதிமாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறனின் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள் சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், தொழில்நுட்ப அதிகாரி கே.எஸ்.ரவி, தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் வே.கெளதமன் ஆகியோரை கடந்த 21ஆம் தேதி கைது செய்தனர். இவர்கள் மூவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள மூவரும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து மூவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கவுதமன், கண்ணன் தலா ரூ.50 ஆயிரமும், ரவி ரூ.15 ஆயிரம் பிணைத் தொகை கட்ட உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு, தினமும் காலை 10.30 மணிக்கு சிபிஐ விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications