முடங்கிய நிலையில்... மது அடிமைகளை மீட்கும் அரசு உதவி எண் 10581... தலைமை நீதிபதி அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுபோதைக்கு அடிமையானவர்களை மீட்க அரசு அறிவித்த உதவி எண்கள் செயல்படாததால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அதிர்ச்சி அடைந்தார்.

மதுபோதையில் இருப்போரை மீட்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலை செயல்படுத்த கோரி வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

De-Addiction helping number 10581 not reachable in High court judge

வழக்கறிஞர் பாலு என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே நேரத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியமில்லை, மதுப்பழக்கத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக இலவச உதவி எண் செயல்படுகிறது எனக்கூறினார்.

இதனையடுத்து அரசு வழக்கறிஞர் அளித்த 10581 என்ற உதவி எண்ணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தொடர்பு கொண்டார். அப்போது உதவி எண் செயல்படவில்லை என்ற தகவல் மட்டுமே வந்ததால் தலைமை நீதிபதி அதிருப்தி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குறைப்பதற்கான பரிந்துரைகளை அமல்படுத்த 2 வாரத்தில் குழு தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் உலக சுகாதார பரிந்துரைகள் அமல் பற்றி குழு 2 மாதத்தில் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உத்தரவிட்டுள்ளார். தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு மது அடிமைகளை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மதுபோதையில் இருப்போரை மீட்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.

வழக்கறிஞர் பாலு தொடர்ந்த இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+