திருப்பதி- புதுச்சேரி ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
புதுச்சேரி: திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு வந்த திருப்பதி-புதுச்சேரி எக்ஸிபிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று காலை 11.30 மணிக்கு திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு திருப்பதி-புதுச்சேரி எக்ஸிபிரஸ் ரயில் வந்தடைந்தது. இந்த ரயிலின் 4-ஆவது அன்-ரிசர்வ்ட் பெட்டியை ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவறையை சுத்தம் செய்ய அதன் கதவைத் திறந்தபோது அதில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததைக்கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்., சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முடிந்த பிறகே மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.