காதலிக்க மறுத்தால் சுவாதி நிலை தான் உனக்கும்... மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!
மதுரை: மதுரையில் வாலிபர் ஒருவர் தன்னை பின் தொடர்வதாகவும், காதலிக்க மறுத்தால் கொலை செய்வதுவிடுவேன் என தன்னை மிரட்டியதாக கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மதுரை கீழசந்தைப் பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் நாகஜோதி (21) அங்குள்ள கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நாகஜோதி, மதுரை தெப்பக்குளம் போலீசில் வாலிபர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தான் கல்லூரிக்கு செல்லும் போது தினமும் என்னை ஒரு வாலிபர் பின் தொடர்கிறார். மேலும் தன்னிடம் வந்து அந்த நபர் பிரச்சனை செய்கிறார். காதலிக்க மறுத்தால், சென்னையில் சுவாதிக்கு ஏற்பட்ட நிலை தான் உனக்கும் ஏற்படும் என மிரட்டல் விடுத்தார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், கீழசந்தைப்பேட்டையை சேர்ந்த முத்துராஜ்(22) என்பவரை கைது செய்தனர்.