கடலூரில் மழை வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெருமழை கொட்டியது. கடலூர் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது.
கெடிலம், பரவணாறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த மழைக்கு நேற்று 20 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 28 பேர் பலியாகி உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அம்மாவட்டத்தில் தொடர்ந்தும் நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications