தானே புயலைப் போல கடுமையான சேதம் வந்துருமோ... அச்சத்தில் கடலூர்
கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் நிலையில் தானே புயலைப் போல கொடூர சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் கடலூர் மாவட்ட மக்கள் உறைந்து போயுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது 2011ஆம் ஆண்டு தானே புயல்.. இன்னமும் தானே புயலின் பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் முழுமையாக மீளவில்லை.

இந்த நிலையில் புதுச்சேரி அருகே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புதிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையத்தால் கடலூரில் பலத்த காற்றும் கனமழையும் கொட்டி வருகிறது. அம்மாவட்டத்தில் நேற்று இரவு முதலே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வீராணம், வாலஜா போன்ற ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. கடல் ஆக்ரோசத்துடன் சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடலூரில் தற்போதைய நிலவரப்படி 72 கி.மீ. வேகத்துக்கு பயங்கர காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன.
பொங்கலையொட்டி பயிரிடப்பட்டுள்ள பன்னீர்கரும்புகள் சாய்ந்துவிட்டன. முந்திரி மரங்களும் பல மரங்களும் இந்த பயங்கர காற்றைத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்து வருவது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் எங்கே மீண்டும் தானே புயலைப் போல பலத்த சேதத்தை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்துடனேயே இருக்கின்றனர் கடலூர் மாவட்டவாசிகள்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications