நானும் லிஸ்டில் இருக்கேன்.. அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தீபா
மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ், மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து தீபா அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: தமிழகத்தின் தேசிய கட்சியின் ஆட்சியை ஒழித்து திராவிட கட்சிகளின் ஆட்சியை ஊன்றி மறைந்த அண்ணாவின் 48வது நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அஞ்சலி செலுத்தினர்.
அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

144 தடை உத்தரவு இருந்த போதிலும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அமைச்சர்கள், நிர்வாகிகள் அண்ணா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அதேபோன்று திமுக சார்பாக அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களுடன் அமைதி ஊர்வலம் சென்று, அண்ணாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசியலுக்கு வர ஆயத்தமாகி வரும் அவரது அண்ணன் மகள் தீபா மெரினாவிற்கு சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications