தம்பி சிவில் கோர்ட்டுக்கு போங்க.. வாரிசு சான்றிதழ் கேட்ட தீபக்குக்கு வட்டாட்சியர் அட்வைஸ்!
ஜெயலலிதா வாரிசாக தம்மை அறிவிக்குமாறு தீபக் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்குமாறு தீபக் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என குடும்பமோ குழந்தைகளோ இல்லை. அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் தான் தனது குடும்பம் குழந்தைகள் என கூறிவந்தார் ஜெயலலிதா.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது பல கோடி ரூபாய் சொத்துக்கள் யாரை சேரும் என்ற கேள்வி எழுந்தது.

நாங்கள் தான் வாரிசு
அப்போது தாங்கள் தான் வாரிசு என கூறி வந்தன ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், தீபக்கும். முதலில் அத்தை பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என்ற தீபா, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் தங்களுக்குதான் சொந்தம் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வாரிசாக அறிவிக்கக்கோரி
ஆனால் தீபக்கோ ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்கக்கோரி கிண்டி வட்டாட்சியரிடம் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என வாரிசு சான்று வழங்குமாறு அவர் விண்ணப்பித்திருந்தார்.

நீதிமன்றத்தை அணுக அட்வைஸ்
இந்நிலையில் வாரிசு சான்றிதழ் கோரிய தீபக்கின் மனுவை கிண்டி வட்டாட்சியர் நிராகரித்துள்ளார். மேலும் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறும் கிண்டி வட்டாட்சியர் தீபக்குக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேவையான ஆவணங்கள் இல்லை
தேவையான ஆவணங்கள் எதையும் தீபக் தாக்கல் செய்யாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை இதேபோல் தீபக்கின் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications