ஜெ.வை விஜயகாந்த் அவதூறாகப் பேசிய வழக்கு.. நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் ஞானசேகர் நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த்துடன் வந்தவர்களுக்கும், அரசு வக்கீல், அதிமுக வக்கீல்களுக்கு இடையே மாஜிஸ்திரேட் முன்பாகவே பெரும் மோதல் மூண்டது.
இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தேமுதிக வக்கீல்களும், ஆதரவாளர்களும் கோர்ட்டுக்குள்ளும், வெளியிலிரும் குவிந்திருந்தனர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications