ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் மீது வழக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் கரூர் முரளி மீது நெல்லை மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி அன்று சுரண்டையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலமைக் கழக பேச்சாளர் கரூர் முரளி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முரளி மீது 199 (2) மற்றும் 500 ஐ.பி.சி. ஆகிய பிரிவுகளில் சுரண்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 18-ந் தேதியன்று திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு முரளிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications