ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து பிரேமலதாவுக்கு விலக்கு

தேமுதிக மகளிர் அணி சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாடம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஒரு பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகமாக நடக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் டாஸ்மாக் கடைகள் தான் என்றார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி பிரேமலதா மீது சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 21ம் தேதி பிரேமலதா நேரில் ஆஜராக உத்தரவிட்டு அவருக்கு சம்மன் அனுப்பி வைத்தது. இதை எதிர்த்து பிரேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு நீதிபதிகள் மதிவாணன், வாசுகி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரேமலதா அவதூறு வழக்கில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தனர்.












Click it and Unblock the Notifications