காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்கிறது- விஜயதாரணி குற்றச்சாட்டு
நகார்கோயில்: எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒடுக்கும் நோக்கத்தில், தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்வதாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார்.
கருங்கலில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் விஜயதாரணி கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் ஞானசேகர், நாகர்கோயில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் விஜயதாரணி ஆஜராகாததால் நாகர்கோவில் அமர்வு நீதிமன்றம் கடந்த ஜுன் 15-ந் தேதிஅவருக்கு பிடி ஆணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, இன்று விஜயதாரணி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயதாரணி கூறியதாவது: எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான காழ்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்கிறது என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications