உச்சநீதிமன்றம் குட்டு வைத்தும் தொடரும் "அவதூறு" வழக்குகள்.... விஜயகாந்த் மீது ஜெ. புது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைப் புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளம் தொடர்பாக விமர்சித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முரசொலி நாளேடு, ஜூனியர் விகடன் குழும இதழ்கள் ஆகியவற்றின் மீது முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் ஏராளமான அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த அவதூறு வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

Defamation suit against Vijayakanth

இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது. "தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அவதூறு வழக்குகள் அதிகமாக தொடரப்படுகின்றன? அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதுதான் எதிர்கட்சிகள் பணி; இப்படி விமர்சனம் செய்வதற்கு எல்லாம் அவதூறு வழக்குகள் தொடர்வதா? அரசு எந்திரம் சரியாக இயங்காததாலேயே விமர்சனங்கள் எழுகின்றன என கடுமையாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.

அத்துடன் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைகளுக்கும் உச்சநீதிமன்றம் தடையை நீட்டித்திருந்தது. இந்நிலையில் சென்னை வெள்ளம் தொடர்பாக விமர்சனம் செய்த விஜயகாந்த் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ளார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெகன் இன்று இவ்வழக்கைத் தாக்கல் செய்தார்.

முரசொலி மீதும் வழக்கு

இதேபோல் அமைச்சர் உதயகுமார் சார்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மீதும் சென்னை வெள்ளம் குறித்து அவதூறான செய்தி வெளியிட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+