பழைய ரூபாய் வாங்குவது நிறுத்தம்… பொதுமக்கள் தவிப்பு
ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை: பழைய ரூபாய் நோட்டுகளை ரயில்வே நிர்வாகம் வாங்குவதை நிறுத்தி விட்டதால் பண தட்டுபாடு அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் 8ம் தேதி நள்ளிரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அப்போது தொடங்கிய பண தட்டுபாடு ஒரு மாதம் கழித்த பிறகும் தொடர்கிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட கால கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் பெட்ரோல் பங்குகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது.

ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுக்கு பழைய ரூபாயை பெற்று வந்த நிலையில் அவையும் நேற்று முன்தினம் இரவுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பல இடங்களில் உள்ள ரயில் நிலையத்தில் பழைய ரூபாயை ஏற்கவில்லை. இது போல் பஸ் நிலையங்களிலும் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவது நிறுத்தப்பட்டிருந்தது.
மாலை வரை வங்கிகளில் முன்பு ஏடிஎம்மில் பணம் எடுக்க கூட்டம் அலைமோதியது. ஏடிஎம்களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருகின்றன. பல ஏடிஎம்கள் இன்னும் திறக்கப்படாமல் மூடி கிடக்கின்றன. பணம் நிரப்பப்படும் ஒரு சில ஏடிஎம்களிலும் 2 மணி நேரத்தில் பணம் தீர்ந்து விடும் நிலை உள்ளது. புதிய 2 ஆயிரம் நோட்டுக்கு சில்லரை தட்டுபாடு நிலவுவதால் பலரும் வங்கிகளில் 100 ரூபாய் நோட்டுக்களாக கேட்கின்றனர்.












Click it and Unblock the Notifications