ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்.. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 17வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 17வது நாளாக இன்றும் முடங்கியது.
டெல்லி : ரூபாய் நோட்டு பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 17வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டில் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடியின் இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பாஜகவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இதனிடையே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள்முதல் ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டத்தொடர் தொடங்கி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் ரூபாய் நோட்டு குறித்து விவாதம் நடத்தப்படாமலேயே பாஜக காலம் தாழ்த்தி வருகிறது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், விவாதத்தின் போது பிரதமர் மோடி அவையில் இருக்க வேண்டும் என்றும் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்றும் லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் இதே பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் நடுவே வந்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, லோக் சபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபாநாயகர் சுமித்ரா மகஜன் அடுத்த 14ம் தேதிக்கு அவையை ஒத்தி வைத்தார்.
பிற்பகலில் கூடிய ராஜ்ய சபாவில் 21 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தை நடத்த குறைந்தது 25 எம்பிக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் குறைவான எண்ணிக்கையில் எம்பிக்கள் இருந்ததால் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications