துணை மேயராக இருந்து மதுரை எம்.பி வேட்பாளரான கோபாலகிருஷ்ணன்
மதுரை: மதுரை மாநகராட்சியின் துணை மேயராக உள்ள கோபாலகிருஷ்ணன் லோக்சபா தொகுதியின் எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுதான். முக்குலத்தோர், சௌராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோபாலகிருஷ்ணன் எம்.பி வேட்பாளராகி உள்ளார்.
மதுரை அருகில் உள்ள முடக்கத்தான் கிராமத்தில் பிறந்த கோபாலகிருஷ்ணனின் தந்தை எஸ்.ராமநாதன், தாயார் லட்சுமியம்மாள்.

பிகாம் பட்டதாரியான கோபாலகிருஷ்ணன், 1968 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர் கலப்புத்திருமணம் செய்து கொண்டவர். இவரது மனைவி தீபா எம்.காம் பட்டதாரி. இவருக்கு ராம்பிரசாத் (14) என்ற மகனும், சௌபர்ணிகா (16) என்ற மகளும் உள்ளனர்.
துணைமேயர் பதவி
முன்னாள் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலர். மதுரை மாநகராட்சித் தேர்தலில் 2011-இல் மாமன்ற உறுப்பினராக முதன்முறையாக போட்டியிட்டு தேர்வு வெற்றி பெற்றார் பின்னர் துணைமேயராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்
ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உறவினர்
துணைமேயராக அறிவிக்கப்பட்ட போதே அதிமுகவினரால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டார். இவர் வளம் கொழிக்கும் துறையை கவனித்து வந்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உறவினராம்.
அமைச்சருக்கு நெருக்கம்
நால்வரணி அமைச்சர்களில் ஒருவருக்கு மிகவும் நெருக்கமாம். மதுரை தொகுதி ஒருவேளை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் கோபாலகிருஷ்ணனுக்கு வேறு வழியில் அதிர்ஷ்டம் நிச்சயம் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications