பாதுகாப்பு வீரர்கள் சூழ, ராமேஸ்வரத்தில் புனித நீராடிய ஓபிஎஸ்!
ராமேஸ்வரம் கடற்கரை அக்னி தீர்த்தத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் புனித நீராடினார்.
Recommended Video
ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி கோயிலுக்கு வழிபட சென்ற தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அங்குள்ள கடற்கரை அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்தார். அப்போது பாதுகாப்பு வீரர்கள் அருகே இருந்தனர்.
இன்று அதிகாலை அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை ஓபிஎஸ் வழிபட்டார். சனிப்பெயர்ச்சி அவருக்கு சாதகமாக இல்லாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆன்மீகத்தில் அதிகளவு பற்றுக்கொண்ட ஓபிஎஸ் ஜாதகப் பரிகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆட்சியில் அவருக்கு சாதகமான நிலை இருந்தாலும், கட்சி மற்றும் எம்.எல்.ஏக்கள் எந்த நேரத்தில் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பொறுத்தே அவரின் பதவியும், ஆட்சியும் நீடிக்கும் என்பதால் பரிகாரங்களுக்கு ஓபிஎஸ் அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
மேலும் அவர் பல ஜாதக பரிகாரங்களை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.