சங்கரன்கோவிலில் சாமி தரிசனத்திற்கு கட்டுபாடு... பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
சங்கரன்கோவிலில் சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பக்தர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி : சங்கரன்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டதால் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென் மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சாமி கோவிலும் ஒன்றாகும். இங்கு நடக்கும் ஆடி தபசு காட்சியை காண்பதற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கூடுவர். அப்போது சாமி, அம்பாள் சன்னதியில் பொது தரிசனத்துடன், கட்டண தரிசனமும் அமுல்படுத்தப்படும்.

சிறப்பு தரிசனத்திற்கு ரூ.10 வசூலித்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் காலையில் நடைபெறும் திருவனந்தல் மற்றும் இரவு நடைபெறும் பள்ளியரை பூஜைகளுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். அவர்கள் கோயில் அம்மன் சன்னதி படி முன்பு அமர்ந்து தரிசனம் செய்வர். இந்நிலையில் கோயில் துணை ஆணையராக பொறுப்பேற்ற செல்லத்துரை சில மாற்றங்கள் செய்தார்.
இதில் காலை, பள்ளியறை தரிசனத்தை அனைவரும் பொது தரிசனத்தில்தான் பங்கேற்க வேண்டும் என்று மாற்றம் செய்தார். இதனால் அம்பாள் சிறப்பு கட்டண வாசலை பூட்டி விட்டனர். இதை அறியாத பக்தர்கள் சிறப்பு கட்டணத்தில் அனுமதி கேட்டு கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மாலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கோயில் துணை ஆணையரிடம் பேசி மாற்றங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் பக்தர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications