உறுதியாக நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும்: ஆளுநரை சந்தித்த பின் ஓபிஎஸ்
ஆளுநரை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், உறுதியாக நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து தற்போதைய நிலவரங்களை பேசியதாகவும் உறுதியாக நல்லதே நடக்கும்; தர்மமே வெல்லும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை வருகை தந்த ஆளுநர் வித்யாசகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். சுமார் 15 நிமிடம் இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது முதல்வர் ஓபிஎஸ் தமது ராஜினாமாவை வாபஸ் பெறுவது மற்றும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தரவேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
அப்போது, ஜெயலலிதாவின் நல்லாசியுடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஆளுநரை சந்தித்து தமிழக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அத்தனை விவரங்களையும் விரிவாக பேசி வந்துள்ளோம்.
உறுதியாக நல்லது நடக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என்று மட்டும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications