மாரடைப்பால் மரணித்த இன்ஸ்பெக்டர்.. பாடையை சுமந்து வந்த எஸ்.பி.. தர்மபுரியில் நெகிழ்ச்சி!
உயிரிழந்த இன்ஸ்பெக்டர் உடலை தோளில் தூக்கி வந்தார் மாவட்ட எஸ்.பி.
தருமபுரி: என்ன பொறுப்பில் இருந்தால் என்ன, என்ன படித்தால் என்ன, என் இனம், என் சகோதரர்கள் என்று வந்துவிட்டால் எல்லாமே காணாமல் போய்விடுகிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த தருமபுரி சம்பவம்.
குப்பூர்பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் வயது. இவருக்கு வயது 48. இவருக்கு தென்றல் என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். வேதாரண்யம் வாய்மேடு பகுதியில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவருக்கு 4 நாள் லீவு கிடைத்துள்ளது. இதனால் ஊருக்கு போய் குடும்பத்தில் எல்லாரையும் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி வந்திருக்கிறார் கண்ணப்பன்.

மாரடைப்பால் மரணம்
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை தூக்கிக் கொண்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஓடினார்கள். ஆனால் கண்ணப்பன் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

மாவட்ட எஸ்.பி.
இதனால் கண்ணப்பனின் உடல் சொந்த ஊரான குப்பூர் பகுதியிலேயே அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். அதற்கான ஏற்பாடும் தயாரானது. கண்ணப்பனின் இறுதி ஊர்வலத்தில் அந்த ஊர் மக்கள் எல்லோருமே கலந்துகொண்டனர் . இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென அங்கு தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்.

அரசு மரியாதை
அப்போது கண்ணப்பனின் உடலை தோளில் சுமந்து கொண்டு சென்றிருப்பவர்களிடம் போய் தானும் சடலத்தை தோள் மீது ஏந்திக் கொண்டார். இப்படியே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தோளிலேயே மாவட்ட எஸ்.பி. சுமந்து வந்தார். இதை அங்கிருந்த எல்லோருமே கண்டு நெகிழ்ந்தார்கள். மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு மறைந்த கண்ணப்பனுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

மதிப்பிற்குரியது
தன்னுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், தனக்கு அறிமுகமே இல்லை என்றாலும் தன் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டரின் மறைவுக்கு மாவட்ட எஸ்.பி. அளித்த மரியாதையையும், கண்ணியமும், பரஸ்பர உணர்வும் மதிப்பிற்குரியது! வணக்கத்திற்குரியது!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications