For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரியை விமர்சித்ததால் ஆத்திரம்.. வீரமணியை மோசமாக சாடிய தயா அழகிரி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயா அழகிரி மற்றும் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி நடுவே வார்த்தை போர் வெடித்துள்ளது.

கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்று மு.க.அழகிரி நேற்று மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நின்றபடி பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதுபற்றி கி.வீரமணியிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, "வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்" என்று தெரிவித்தார்.

Dhaya Alagiri criticize Veeramani in Twitter

திமுகவில் இருப்போரை என்பதைத்தான் வீட்டில் இருப்போரை என பொருள்பட வீரமணி கூறியதாக தெரிகிறது.

இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களில், தயா அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், வீரமணியை கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார்.

"காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார்த்தைப்போர் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Dhaya Alagiri criticize Veeramani in Twitter as he slam MK Alagiri over DMK party issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X