அதிமுக வேட்பாளர்களில் பல பேர் சசிகலா ஆட்களாமே?
சென்னை: அதிமுக வேட்பாளர்களில் பலர் சசிகலா ஆதரவாளர்கள் என்று அதிமுகவினர் மத்தியில் கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது. சசிகலா மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் பலரும் வேட்பாளர் தேர்வில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாகவும், இதனால் உண்மையான அதிமுகவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் மத்தியில் புலம்பல் காணப்படுகிறது.
பெரும் பெரும் மனிதர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், சாதகமானவர்களுக்கு சசிகலா மூலமாக சீட் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் அதிமுகவினர் புலம்புகின்றனர்.
இந்த தலையீடு காரணமாக ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்ட பலருக்கும், உண்மையான அதிமுக விசுவாசிகளுக்கும் சீட் கிடைக்காமல் போய் விட்டதாகவும் பேசப்படுகிறது.

தென் மாவட்டங்கள்
சசிகலாவின் ஆதிக்கம் தென் மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளதாம். தென் மாவட்ட வேட்பாளர்களில் பலரும் சசிகலா மூலமாக சீட் பெற்றவர்கள் என்று சொல்கிறார்கள்.

அந்த 5 பேர்
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 5 பேர் கை காட்டியவர்கள்தான் வேட்பாளர்களாகியுள்ளனராம். இவர்களின் ஆசி பெற்றவர்கள்தான் பெரும்பாலான வேட்பாளர்கள் என்றும் சொல்கிறார்கள்.

எளிதில் கண்டுபிடிக்க முடியாத வண்ணம்
இவர்கள் சசிகலா ஆதரவாளர்கள் என்று எளிதிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் திறமையாக செயல்பட்டு தங்களது ஆட்களை வேட்பாளர்களாக்கியுள்ளது சசி குருப் என்கிறார்கள்.

'மணல்' தொடர்பு
தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய மணல் புள்ளி மூலம் சிலருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது அவரது மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியினர் செயல்பட மாட்டார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications