அன்று எம்.ஜி.ஆருக்கு பிரசாதம் கொடுத்த அதே தீட்சிதர்.. இன்று ஜெ.,வுக்கும் கொடுத்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களிலும் பிரார்த்தனை நடந்து வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான, ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 Dikshitar special pooja for jayalalithaa

இதையடுத்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கிறிஸ்த நிர்வாகிகள் ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமிய நிர்வாகிகள் சிறப்பு தொழுகைகளை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து அப்பல்லோவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வந்து செல்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா, பூரண நலம் பெற்று, ஆயுள் நீடிக்க சிதம்பரம் நடராஜர் கோயிலிலில் யாகம் செய்து பிரசாதத்தை எடுத்து வந்துள்ளார் கைலாச சங்கர தீட்திதர் மற்றும் அவரது குடும்பத்தினர்.

நேற்று அப்போலோவுக்கு பிரசாதம் எடுத்து வந்த அவர்களை உள்ளே அனுமதிக்காமல் சுமார் அரை மணி நேரமாக காக்க வைத்தனர். பின்னர் மேலிடத்தில் அனுமதி பெற்றவுடன் ஒருவரை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றனர். இவர் 1984 எம்.ஜி.ஆர் உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இதுபோல் யாகம் செய்து பிரசாதம் எடுத்து வந்தாராம். அதனால் தான் இவருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+