என்னை பதவியில் இருந்து நீக்க தினகரன் யார்? - அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் சுளீர்

ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு தினகரன் யார் என்று அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஜெயலலிதாவால் ஒரங்கட்டப்பட்ட தினகரன் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட என் பதவியை பறிக்கும் உரிமை இல்லை என்று அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் எடிப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி, தினகரன் அணி என பிரிந்தது. இந்நிலையில் டிடிவி தினகரனை ஓரம் கட்டுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தி அவரை துணை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.

Dinakaran has no rights to sack me from post, says organisation secretary Sudha

தற்போது எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருவதால் தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள பலரது பொறுப்புகளை தினகரன் பறித்து வருகிறார்.

அந்த வகையில் டிடிவி தினகரன் மீது போர்க்கொடி தூங்கிய அதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவனை அப் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சுதா பரமசிவன் கூறுகையில், அதிமுக பொது செயலாளராக ஜெயலலிதா இருந்த போது என்னை 1998-ஆம் ஆண்டு பகுதி செயலாளர், பொது குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர், ஜெ. பேரவை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் ஜெயலலிதா என்னை நியமித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு முன்பே என்னை அமைப்பு செயலாளர் ஆக்கினார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட என்னை தினகரன் அமைப்பு செயலாளர் பதவியில் நீக்குவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை தினகரன் கட்சிக்குள்ளேயே வரமுடியாமல் ஓரம் கட்டப்பட்டிருந்தார்.

இதில் இருந்தே தினகரனுக்கு என்னை நீக்கும் அதிகாரம் கிடையாது என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+