தொடரும் இழுத்தடிப்பு: டிடிவி தினகரன் மீதான ஃபெரா வழக்குகள் விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் மீதான ஃபெரா வழக்குகள் விசாரணை ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக(அம்மா) கட்சி வேட்பாளராக போட்டியிடும் டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு ஏப்ரல் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சசிகலா, டி.டி,வி தினகரன், பாஸ்கரன் ஆகியோர் 1996-1997-ல் அமெரிக்காவில் ரின் சார்ட் லிமிடெட் நிறுவனத்திடமும், சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடமும் எந்த ஒரு ஆவணங்களுமே இல்லாம பணம் பரிவர்த்தனை செய்துள்ளனர். இதனால் மூன்று பேர் மீதும் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டி.டி.வி தினகரன் மீது டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கு இங்கிலாந்தின் வர்ஜின் தீவில் உள்ள பர்க்லே வங்கி மூலம் 1.04 கோடி அமெரிக்க டாலரை மாற்றியது; மற்றும் அயர்லாந்தின் வெஸ்ட்பேங்க் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 44.37 பவுண்ட்டுகளை மாற்றியது ஆகிய வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ஆஜராக விலக்கு கோரி மனு
இவ்வழக்கு விசாரணைக்கு தினகரன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தாம் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் தேர்தல் முடியும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

20 ஆண்டுகாலம் இழுத்தடிப்பு
20 ஆண்டுக்கு மேலாக இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகையால் டி.டி.வி. தினகரன் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது. டிடிவி தினகரன் வழக்கை இழுத்தடிக்கவே தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகிறார். தேர்தலுக்கும் வழக்கு விசாரணைக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை எனவும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.

தினகரன் மனு தள்ளுபடி
பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கை விரைவாக நடத்த வேண்டும். ஆகையால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து எந்த ஒரு விலக்கும் தர முடியாது என்று கூறி டி.டி.வி. தினகரன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். இன்று முதல் தினந்தோறும் தினகரன் வழக்கில் விசாரணை நடைபெறும் எனவும் மாஜிஸ்திரேட் மலர்மதி கூறியிருந்தார்.

மீண்டும் ஒத்திவைப்பு
இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். ஆகையால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதை ஏற்று டிடிவி தினகரன் மீதான வழக்கு விசாரணையை ஏப்ரல் 4-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்தி வைத்தார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications