For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுயநலத்திற்காக முதல்வர் அணிக்கு தாவுகிறார்கள்... தங்க தமிழ்ச்செல்வன் பாய்ச்சல்!

தினகரன் ஆதரவாளர்கள் சுயநலத்திற்காக முதல்வர் அணிக்கு தாவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தினகரன் ஆதரவாளர்கள் சுயநலத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணிக்கு தாவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரனின் ஆதரவு எம்பிக்களான திண்டுக்கல் உதயக்குமார் மற்றும் வேலூர் செங்குட்டுவன் ஆகியோர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நேற்று மூன்று எம்பிக்கள் தெரிவித்த நிலையில் இன்று மேலும் இரண்டு எம்பிக்கள் தினகரன் கூடாரத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Dinakaran support MPs jumped to edappadi palanisami team for selfishness said Thanga tamilselvan

இந்நிலையில் எம்பிக்கள் அணி மாறியது குறித்து தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சுயநலத்திற்காக அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவியிருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மேலும் தினகரனின் ஆதரவாளர்கள் கட்சி தாவல் தடை சட்டத்துக்கு பயந்து எடப்பாடி அணிக்கு செல்கின்றனர் என்றும் அவர் தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார். ஆர்கே நகர் தொகதியில் மக்கள் செல்வாக்கு தங்களுக்கு தான் உள்ளது என்றும் வெற்றி தங்களுக்கே என்றும் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

English summary
Dinakaran support MPs jumped to edappadi palanisami team for selfishness said Thanga tamilselvan. MPs Udhaya kumar and Senguttuvan jumps to CM team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X