ரோட்டுக் கடையில் பல்லி விழுந்த பனியாரம் சாப்பிட்ட 35 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பல்லி விழுந்த மாவில் செய்த பனியாரத்தைச் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள சின்னமுளையூரில் தெருவோர இட்லிக் கடை நடத்தி வருபவர் சோலையம்மாள். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் இட்லி, பனியாரம், ஆப்பம் போன்றவற்றை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
அதன்படி, இன்று காலை சோலையம்மாள் விற்ற பனியாரம் ஒன்றில் பல்லியின் இறந்த பாகம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக சோலையம்மாளிடம் தகவல் தெரிவிக்கப் பட்டது. சிறிது நேரத்திலேயே சோலையம்மாள் விற்ற பனியாரத்தில் பல்லி கிடந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது.
இதற்கிடையே, சோலையம்மாளிடம் பனியாரம் மற்றும் இட்லி வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் பெருமளவில் பள்ளிக்கு சென்று இருந்தனர். இதனால், பதறிப் போன அக்குழந்தைகளின் பெற்றோர், விரைந்து சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
பெற்றோர் வருவதற்கு முன்னதாகவே சில மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், மேயர் மருதராஜ், நகர செயலாளர் பாரதிமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று, குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் நலம் விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படியும் டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பல்லி விழுந்த மாவில் செய்த பலகாரங்களைச் சாப்பிட்டு மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications