7 பேர் விடுதலை... பாவத்தையும் சாபத்தையும் வாங்குகிறது பாஜக!- இயக்குநர் வ கௌதமன்
வேலூர்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் பாவத்தையும், சாபத்தையும் பா.ஜ.க வாங்குகிறது என வ இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரை இயக்குநர் கௌதமன் மற்றும் மாணவர் சங்கத்தினர் இன்று (3-ம் தேதி) சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இந்த சந்திப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுதான். முதல்வர் இவர்களை விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டதற்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு இல்லை.
சிறையில் உள்ள 7 பேரும், கண்டிப்பாக முதல்வர் எங்களை விடுவிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார்கள். 'கடந்த 26 ஆண்டுகளாக எப்போது விடுதலை ஆவோம் என்று வேதனை அனுபவித்து வருகிறோம். விடுதலையானால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி,' என்றனர்.
மத்திய அரசியல்வாதிகள், இவர்கள் விடுதலைக்கு தடை சொல்வதை பெரும் சாபமாக நினைக்க வேண்டும். அதேபோல், காங்கிரஸ் தமிழர்களை கொன்று குவிக்கும் அகோர பசியில் இருந்து இன்னும் மாறவில்லை. மாநில மற்றும் மத்திய அரசியல்வாதிகள் தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம். விடுதலைக்கும் தடை போட வேண்டாம்.
சஞ்சய் தத் 220 பேரை கொலை செய்ய உதவியாக இருந்தார். அவருக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு, 5 ஆண்டிலேயே விடுதலையானார். நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால்தான் விடுதலை அடைய முடியுமா?
இன்று நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜூன், அந்த 7 பேரை விடுவிக்க முடியாது என்று கூறுவது மனதை காயப்படுத்துகிறது. பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட இல்லாமல் இருக்கிறது. வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறாது. ஏன் என்றால் அந்த 7 பேரின் விடுதலையில் பாவத்தையும், சாபத்தையும் வாங்குகின்றனர்,'' என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications