இது தற்செயலா இல்லை தெரியாமல் நடந்ததா கமல்?.. இயக்குநர் தாமிரா கேள்வி!
Recommended Video

சென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் பல சர்ச்சைகளையும், புயலையும் கிளப்பப் போவது உறுதியாகி வருகிறது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒற்றை வசனம் சர்ச்சையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் தாமிரா காதர் மொஹைதீன் கமல்ஹாசனுக்கு சில கேள்விகளை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு:

ஜிப்ரான் தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலில், தன் பெயரை முகம்மது ஜிப்ரான் எனப் போட சொல்லியிருக்க மாட்டார்.
அப்படிச் சொல்வதானால் என்னிடமும் தனது பெயர் மாற்றத்தை சொல்லியிருப்பார்
காரணம்
எனது ஆண்தேவதை திரைப்படத்திற்கும் அவர்தான் இசை.
இந்தி முன்னோட்டத்தில் ஜிப்ரானென்றும் தமிழில் முகம்மது ஜிப்ரான் என்றும் இருப்பது தற்செயல் அல்ல.
ஒரு வேளை கமலஹாசனுக்குத் தெரியாமல் இது நடந்திருக்குமா ?
என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.
கமல் திரைப்படத்தில் நிறைய தவறுகள் இருக்கும் அதை மற்றவர்கள் செய்ய ஒருபோதும் அவர் அனுமதித்ததில்லை.
விஸ்வரூபம் ஒன்று திரைப்பட பிரச்சனை உருவான பிரச்சனை அல்ல உருவாக்கப்பட்ட பிரச்சனை.
இந்தி பதிப்பில் முசல்மான் என்றிருப்பதும் தமிழில் எந்த மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்றிருப்பதும் ஏன் என்பதை கமல் விளக்கினால் நல்லது.
ஒரு திரைப்படத்தின் வெற்றியை விட சமூக அமைதி முக்கியம்.
விஸ்வரூபம் 2 ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்துமானால் கமலின் அரசியல் சந்தேகத்திற்கு உரியது.
இந்த முறை நீங்கள் ஓடவும் முடியாது
ஒளியவும் முடியாது கமல்.
கமல் விளக்குவாரா?












Click it and Unblock the Notifications