பொங்கி வரும் காவிரி.. திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, உபரி நீர் திறப்பு 40 ஆயிரம் கன அடி நீராக அதிகரிக்கப்பட உள்ளது. இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இன்று திருச்சி மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் 40,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆதலால், திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

Distrct collector Rajamani announced: flooding alert in Trichy

திருச்சி மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சோமரசம்பேட்டை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம், கல்லனை ஆகிய இடங்களில் மீட்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+