For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நில விவகார வழக்கு.. நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

நெல்லை: நில விவகார வழக்கு ஒன்றில், நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து குடிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் 29 ஆம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை டவுண் பகுதியில் உள்ள லட்சுமி தியேட்டர் எதிர்புறம் ஆதினத்திற்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. கடந்த 2010 ஆண்டு இந்த இடத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து கட்டிடம் கட்டியுள்ளார். இதுதொடர்பாக ஆதினம் தரப்பில் கடந்த 2010-ம் ஆண்டு நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

 District Court issues warrant against nellai collector

இதுதொடர்பான விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கில் வரும் 29-ந் தேதி நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
District Court issues warrant against nellai collector karunakaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X