'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்
என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு என பூடகமாக பதிவிட்டுள்ளார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
Recommended Video

சென்னை: தாம் அரசியலில் செயல்பட போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு என கொதித்திருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த்.
அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக தினகரனை சசிகலா நியமித்தது முதல் திவாகரன் மகன் ஜெயானந்த் தீவிர அரசியலில் குதிக்க விரும்பினார். தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.

இளவரசி மகன் விவேக், கிருஷ்ணப்பிரியா மல்லுக்கட்டிய போதும் திவாகரன் தினகரனுடன்தான் இருந்து வந்தார். தினகரன் தனிக்கட்சி தொடங்குகிறார் என்கிற நிலையில் போஸ் மக்கள் பணியகம் என்ற அமைப்பை தொடங்கினார் ஜெயானந்த்.
தினகரன் தனி கட்சி தொடங்கிய நிலையில் அதில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் என ஜெயானந்த் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் பட்டும் படாமலும் தினகரனை ஆதரித்து ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வந்தார் ஜெயானந்த்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக்கில் ஜெயானந்த் ரொம்பவே அதிகமாக பொங்க தொடங்கியுள்ளார். முதலில், "மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்" என பூடகமாக ஒரு பதிவைப் போட்டிருந்தார்.
அதன் பின்னர் நேற்று என்னால் முடிந்த நல்லதை #போஸ்_மக்கள்_பணியகம் சார்பில் செய்யப் போகிறேன். "அரசியலில் செயல்பட போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு. நன்றி வணக்கம்." என மற்றொரு பதிவை போட்டார் ஜெயானந்த்.

இன்று மீண்டும், #என்_நேற்றைய_பதிவின்_நோக்கம் #நண்பர்களே_நன்கு_கவனிக்கவும்... நான் அ.ம.மு.க என்று எங்கும் குறிப்பிடவில்லை... குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என ஏன் ஒரு சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்??? எப்போது பிரச்சனை வரும் என ஒரு சிலர் நம் கூட்டத்திலேயே காத்திருப்பாதாக ஒரு சிலர் வாயிலாக அறிந்தேன். நம் தலைமை இதனை கண்டறியும் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தொடரும் மல்லுக்கட்டு!












Click it and Unblock the Notifications