தினகரனின் மேலூர் கூட்ட மேடையில் அமர்ந்திருந்த திவாகரன் மகன் ஜெயானந்த்!
டிடிவி தினகரனின் தலைமையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திவாகரனின் மகன் ஜெயானந்தும் பங்கேற்றுள்ளார்.
மதுரை: டிடிவி தினகரனின் தலைமையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திவாகரனின் மகன் ஜெயானந்தும் பங்கேற்றுள்ளார்.
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி அணி தினகரனை ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ் அணியுடன் கூட்டு வைக்க முயன்று வருகிறது.

இந்நிலையில் தனது பலத்தை காட்டும் வகையில் டிடிவி தினகரன் மதுரை மாவட்டம் மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி இன்று மாலை விழாத் தொடங்கியது.
இதில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், தோப்பு வெங்கடாசலம், ஜக்கையன், செந்திலபாலாஜி உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திவாகரனின் மகன் ஜெயானந்தும் பங்கேற்றிருந்தார்.
விழாவின் மேடையில் அவர் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. ஜெயானந்த் அரசியலுக்கு வருவார் என அரசல் புரசலாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயானந்த் தினகரனுக்கு ஆதரவாக முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றிருந்த மேடையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications