தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம்- தேமுதிக
சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து முதல் முறையாக தெளிவாகப் பேசியுள்ளது தேமுதிக. அதாவது லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அக்கட்சி கூறி விட்டது.
இதுவரை ஒன்றுமே புரியாத அளவில்தான் தேமுதிகவின் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது தெளிவாக முதல் முறையாக பேசியுள்ளது தேமுதிக.

தேர்தல் கூட்டணி தொடர்பாக அக்கட்சியின் சட்டசபை கொறடாவும், கொள்கை பரப்புச் செயலாளருமான வி.சி.சந்திரகுமார் கூறுகையில், நாடாளுமன்றத் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை தேமுதிகவின் கூட்டணி குறித்த நிலைப்பாடு தெரியாது என்பது உறுதியாகியுள்ளது.
தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்து, விஜயகாந்த் சைடிலிருந்து உருப்படியாக எந்தத் தகவலும் வராததால் சுணக்கமடைந்த திமுக தரப்பும் தற்போது மெதுவாக கூட்டணிக்குள் தேமுதிகவை இழுக்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications