Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கு வாக்களித்தால் என்ன நடக்கப் போகிறது... விரக்தியோடு சொல்லிவிட்டு போன விஜயகாந்த்!

ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    யாருக்கு வாக்களித்தால் என்ன நடக்கப் போகிறது... விரக்தியோடு சொல்லிவிட்டு போன விஜயகாந்த்!- வீடியோ

    சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன என்று பேசி விட்டு சென்றுள்ளார்.

    தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். இந்த ஆண்டுக்கான மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் 2 நாளாக டிவி பார்க்காததால் அது பற்றி தெரியவில்லை என்றார்.

    வன்மையாக கண்டிக்கத்தக்கது

    வன்மையாக கண்டிக்கத்தக்கது

    பள்ளி மாணவர்களின் தொடர் தற்கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மைத்துனர் சுதீஷிடம் 7 மாணவர்களா என்று கேட்டார். அதற்கு வேலூர் அருகே 4 மாணவர்கள் இறந்தது மற்றும் வேறு 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று சுதீஷ் சொல்ல ஓஹோ என்று சொல்லிவிட்டு வன்மையாக கண்டிக்கத்தக்கது, இது அரசின் அவல நிலை என்று பதிலளித்தார்.

    எதிர்ப்பவர்கள் யார்?

    எதிர்ப்பவர்கள் யார்?


    ஆர்.கே நகர் தொகுதியில் மாலை 5 மணி முதல் 9 மணி வரை வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
    காசு கொடுப்பவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள், காசு கொடுக்க முடியவில்லை என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

    யாருக்கு ஓட்டு போட்டால் என்ன?

    யாருக்கு ஓட்டு போட்டால் என்ன?

    ஆர்கே நகர் தேர்தலில் தேமுதிக போட்டியில்லை, யாருக்கு வாக்களித்தால் என்ன. அரசு மக்கள் நலனை கவனத்தில் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.ஆட்சியின் அவல நிலையை கண்டிக்கிறேன் என்றும் விஜயகாந்த் கூறினார்.

    ஒரு வாரம் பரிசோதனை

    ஒரு வாரம் பரிசோதனை

    மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள விஜயகாந்த்துடன், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் சென்றுள்ளனர். சமார் ஒரு வார காலம் விஜயகாந்த் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வார் என்று தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+