யாருக்கு வாக்களித்தால் என்ன நடக்கப் போகிறது... விரக்தியோடு சொல்லிவிட்டு போன விஜயகாந்த்!
ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் என்ன என்று பேசி விட்டு சென்றுள்ளார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். இந்த ஆண்டுக்கான மருத்துவ சிகிச்சைக்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் 2 நாளாக டிவி பார்க்காததால் அது பற்றி தெரியவில்லை என்றார்.

வன்மையாக கண்டிக்கத்தக்கது
பள்ளி மாணவர்களின் தொடர் தற்கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மைத்துனர் சுதீஷிடம் 7 மாணவர்களா என்று கேட்டார். அதற்கு வேலூர் அருகே 4 மாணவர்கள் இறந்தது மற்றும் வேறு 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று சுதீஷ் சொல்ல ஓஹோ என்று சொல்லிவிட்டு வன்மையாக கண்டிக்கத்தக்கது, இது அரசின் அவல நிலை என்று பதிலளித்தார்.

எதிர்ப்பவர்கள் யார்?
ஆர்.கே நகர் தொகுதியில் மாலை 5 மணி முதல் 9 மணி வரை வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
காசு கொடுப்பவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள், காசு கொடுக்க முடியவில்லை என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.

யாருக்கு ஓட்டு போட்டால் என்ன?
ஆர்கே நகர் தேர்தலில் தேமுதிக போட்டியில்லை, யாருக்கு வாக்களித்தால் என்ன. அரசு மக்கள் நலனை கவனத்தில் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.ஆட்சியின் அவல நிலையை கண்டிக்கிறேன் என்றும் விஜயகாந்த் கூறினார்.

ஒரு வாரம் பரிசோதனை
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள விஜயகாந்த்துடன், மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் சென்றுள்ளனர். சமார் ஒரு வார காலம் விஜயகாந்த் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வார் என்று தெரிகிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications