For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி சேர்ந்த ஜெ, மோடி ஜெயிச்சுட்டாங்க.. நாங்க எப்ப ஜெயிக்கிறது: பொன்னாரிடம் புலம்பிய கேப்டன்!

By Mathi
|

சென்னை: தேமுதிக கூட்டணி வைத்த அதிமுக, பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் தேமுதிக தோல்வியையே தழுவி வருவது குறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் புலம்பியிருக்கிறாராம்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லவில்லை.

14 தொகுதியிலும் படுதோல்வி

14 தொகுதியிலும் படுதோல்வி

போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது தேமுதிக.

எங்க வந்துச்சு மோடி அலை?

எங்க வந்துச்சு மோடி அலை?

இது தொடர்பாக பாஜக தலைவர்களிடம் பேசிய விஜயகாந்த், நீங்கள் சொன்ன மோடி அலை வட இந்தியாவில்தான் வீசியிருக்கிறது. தமிழகத்தில் வீசவே இல்லை என்று கூறியிருக்கிறார்.

பொன்னாரிடம் புலம்பிய கேப்டன்

பொன்னாரிடம் புலம்பிய கேப்டன்

அதுவும் தமது மச்சான் சுதீஷ் தோல்வியடைந்ததை ஜீரணிக்க முடியாதவாறு பொள்ளாச்சியில் இருந்த விஜயகாந்தை பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது விஜயகாந்த் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளிவிட்டாராம்.

எல்லாரும் ஜெயிக்கிறாங்களே..

எல்லாரும் ஜெயிக்கிறாங்களே..

இந்த சந்திப்பில்தான் பொன்னாரிடம், நாங்க கூட்டணி வைத்த ஜெயலலிதா ஜெயிக்கிறாங்க.. உங்க மோடி ஜெயிக்கிறாரு.. ஆனா நாங்க எப்பதான் ஜெயிப்போமோ? என்று நொந்து போய் குமுறியிருக்கிறார் கேப்டன்.

சுதீஷுக்கு ராஜ்யசபா சீட்..

சுதீஷுக்கு ராஜ்யசபா சீட்..

அவரை சமாதானப்படுத்திய பொன்.ராதாகிருஷ்ணன், சட்டசபை தேர்தலில் வெல்வோம்..எப்படியும் சுதீஷூக்கு ஒரு ராஜ்யசபா சீட் வாங்கித் தருகிறேன் என்று ஆறுதல் கூறினாராம்.

English summary
DMDK chief Vijayakanth, part of the BJP-led NDA, is very upset over the lok sabha election results, said sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X