நாமக்கலில் உடைந்தது தேமுதிக.. நகரச் செயலாளர்- 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவுக்குத் தாவினர்
நாமக்கல்: தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த முடிவை எதிர்த்து நாமக்கல்லில் நகரச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
மக்கள் நலக் கூட்டணி,. தேமுதிகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் தேமுதிக தரப்பிலும் இதற்கு தற்போது அதிருப்தி கிளம்ப ஆரம்பித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர தேமுதிக செயலர் ஆர்.செல்வராஜ், துணைச்செயலர் ஏ.பிரேம்குமார், இளைஞர் அணிச் செயலர் ஆர்.சதீஷ்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலரும் தொழில் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
விஜயகாந்த்தின் முடிவு தங்களுக்கு திருப்தி தரவில்லை என்றும் இதனால் அதிமுகவில் சேர முடிவு செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications