காலவரையற்ற உண்ணாவிரதம்: தேமுதிக எம்.எல்.ஏ. அருள்செல்வன் கைது- மருத்துவமனையில்...

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த மயிலாடுதுறை தேமுதிக எம்.எல்.ஏ. அருள்செல்வன் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை சட்டசபைத் தொகுதி, தேமுதிக எம்.எல்.ஏ., அருள்செல்வன். இவர், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் மற்றும் புறவழி சாலை அமைப்பது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

DMDK MLA Arulselvan arrested

அவருடன், 50க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.,வினர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அருள்செல்வனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, மயிலாடுதுறை வணிகர்கள் கடந்த திங்களன்று மதியம் வரை, கடைகளை அடைத்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த அருள்செல்வனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+