முதல்வரை தேர்வு செய்ய நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
சென்னை: புதிய முதல்வரை தேர்வு செய்ய நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அன்றைய தினமே அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை புதிய முதல்வராக எம்.எல்.ஏ.க்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
புதிய முதல்வரை தேர்வு செய்ய நடந்த கூட்டத்தில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மா.பா.பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications