For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தட்டு நிறைய லட்டு… தொழிலாளர்களுக்கு சீருடை… விஜயகாந்தின் மே தின கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தொழிலாளர்கள் தினமான இன்று தட்டு நிறைய லட்டு... தொழிலாளர்களுக்கு சீருடை என தேமுதிக அலுவலகம் உற்சாகமாக காணப்பட்டது. தலைவர் விஜயகாந்த் அலுவலகத்திற்குள் என்டர் ஆக ஒரே ஆரவாரம்தான்.

ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் மே தினத்தை தேமுதிகவினர் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

இந்த கொண்டாட்டத்தில் தொண்டர்களுடன் தொண்டராய் விஜயகாந்த் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

கொடி ஏற்றிய விஜயகாந்த்

கொடி ஏற்றிய விஜயகாந்த்

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடியினை ஏற்றி வைத்த விஜயகாந்த் தொழிலாளர்களிடையே உற்சாகமாக பேசினார்.

தட்டு நிறைய லட்டு

தட்டு நிறைய லட்டு

லட்டு இல்லாத பண்டிகையா என்பது போல தட்டு நிறைய லட்டுக்களை வைத்து தனது கை பட தொழிலாளர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார் விஜயகாந்த்.

தொழிலாளர்களுக்கு சீருடை

தொழிலாளர்களுக்கு சீருடை

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கி மகிழ்ந்தார். அனைவருக்கும் சிறப்பான விருந்தும் அளிக்கப்பட்டது.

தேமுதிகவினர் தொண்டர்கள்

தேமுதிகவினர் தொண்டர்கள்

மே தின நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ ,கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ., துணை செயலாளர் என்.ஜாகிர் உசேன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி செயலார்கள் , நிர்வாகிகள், மகளிர் அணியினர் , தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

English summary
DMDK chief Vijayakanth celebrated May day at his party head quarters in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X