ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு காங். எதிர்ப்பு.. கூட்டு சேரும் ஆர்வத்தை மூட்டை கட்டும் தேமுதிக!
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில்லை என்ற முடிவுக்கு வரவேண்டிய நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகியோர் இந்த விவகாரத்தில் சற்றே நிதானமாக கருத்து தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார்.

கோதாவில் குதித்த மன்மோகன்சிங்
ராகுலே கருத்து தெரிவித்துவிட்டாரே என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் தம் பங்குக்கு இப்போது எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார். அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது.

ஓரணியில் தமிழகம்
ஒட்டுமொத்த தமிழகமே அதிமுக, திமுக, மதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, பாமக என கட்சி பாகுபாடின்றி அனைத்து தலைவர்களும் இந்த பிரச்சனையில் ஓரணியில் திரண்டுள்ளனர்.

அன்னியப்பட்ட காங்கிரஸ்
ஆனால் தமிழர்களிடம் அன்னியப்பட்டுப் போன காங்கிரஸ் கட்சி மட்டும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இரட்டை குதிரை சவாரி
இதுநாள் வரை காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று இரட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருந்த தேமுதிக இனி காங்கிரஸ் குதிரையில் ஏறினால் பலத்த அடிதான் விழும் என்பதை உணர்ந்திருக்கும்.

பாஜக அல்லது திமுக அணி
இதனால் திமுக அல்லது பாரதிய ஜனதாவிடம்தான் தேமுதிக அடைக்கலமாக வேண்டிய நிலை இருக்கிறது.

தேமுதிக இறுக்கம் தளர்கிறது
மேலும் பாரதிய ஜனதா தொகுதியில் 16 தொகுதிகளையும் திமுகவிடம் 14 தொகுதிகளையும் கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த தேமுதிக, இனி தன் இறுக்கத்தை தளர்த்தவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் தமிழக அரசியலில் நீடித்து வந்த கூட்டணி குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications