திமுகவை வலுப்படுத்த 6 பேர் குழு அமைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இதைத் தொடர்ந்து நடைபெற்ற திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் திமுகவை வலுப்படுத்துவதற்கான குழு ஒன்று அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

DMK announces restructure committee

இந்நிலையில் திமுக தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், திமுக வலுப்படுத்தும் சாத்தியக் கூறுகளை ஆராய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமை கழக அறிக்கை:

2.-6.-2014 அன்று நடைபெற்ற கழக உயர்நிலைச் செயல் திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 6-வது தீர்மானத்தினையொட்டி, மாவட்டக் கழக நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும், மேலும் வலிமைப்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்ந்து முடிவெடுக்கவும், கழகத் தலைமைக்குப் பரிந்துரை செய்யவும், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று தலைமைக் கழகத்தினால் அமைக்கப்படுகிறது.

1. திருவேங்கடம், கலசப்பாக்கம்

2. கல்யாணசுந்தரம், திருத்துறைப்பூண்டி

3. இரா.ராஜமாணிக்கம், ஒரத்தநாடு

5. கே.எஸ். ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்

6. சச்சிதானந்தம், ஈரோடு

இவ்வாறு திமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+