திமுகவில் அதிரடி- 65 மாவட்டங்களாக பிரிப்பு! சென்னை, மதுரை, கோவை 4 மாவட்டங்களானது!!
சென்னை: திமுகவில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக குறுநில மன்னர்களாக கோலோச்சி வந்த மாவட்ட செயலர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. திமுக நிர்வாக அமைப்பு மொத்தம் 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. திமுகவின் இந்த படுதோல்விக்கு காரணமே 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளர்கள் இருப்பவர்கள்தான் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது மொத்தம் 35 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவர் மீதும் நாள்தோறும் திமுக தலைமைக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்தன. ஆனால் மாவட்ட செயலாளர்களுக்கு பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் ஜூன் 2-ந் தேதி கூடிய திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் திமுகவை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி கல்யாண சுந்தரம், ஈரோடு சச்சிதானந்தம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு சென்னையில் கூடி விவாதித்தது. இந்தக் குழுவின் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் 150 பக்க பரிந்துரை அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆறு பேர் குழு அளித்தது. இதனடிப்படையில் திமுக 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
65 மாவட்டங்களானது!
சென்னை, மதுரை, கோவை ஆகியவை 4 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடசென்னை, தென் சென்னை என்பது பிரிக்கப்பட்டு கிழக்கு சென்னை, மேற்கு சென்னை, தென் சென்னை, வடசென்னை என 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
வேலூர், நெல்லை, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், காஞ்சி, கடலூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் கிருஷ்ணகிரி, விருதுநகர், புதுக்கோட்டை,கன்னியாகுமரி, தூத்துகுடி, உள்ளிட்டவை இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
பெரம்பலூர், சிவகங்கை ,நீலகிரி, திருவாரூர், கரூர், தேனி, தருமபுரி, அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்படவில்லை.
-
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications