உளுந்தூர்பேட்டை தொகுதியை மமகவுக்கு கொடுப்பதா?பொன்முடி கொடும்பாவியை எரித்த திமுக தொண்டர்கள்!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: திமுக கூட்டணியில் உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதியை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திமுக கூட்டண்யில் உளுந்தூர்பேட்டை உட்பட 5 சட்டசபை தொகுதிகள் மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு உளுந்தூர்பேட்டை திமுகவினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

உளுந்தூர்பேட்டையில் எளிதாக திமுக வெற்றி பெற முடியும் என்ற நிலையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதை எப்படி ஏற்பது? இதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடிதான் காரணம் என குற்றம்சாட்டுகின்றனர் திமுக தொண்டர்கள்.

அத்துடன் பொன்முடியின் கொடும்பாவியையும் திமுக தொண்டர்களே எரித்ததால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications