காவிரி பிரச்னைக்காக மார்ச் 30ல் கூடுகிறது திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம்!
காவிரி பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக மார்ச் 30ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : காவிரி பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைமை செயற்குழு கூட்டம் அவசரமாக கூடுகிறது. மார்ச் 30ம் தேதி செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மார்ச் 29 வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் இதுவரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த இசைவும் காட்டியதாக தெரியவில்லை. மாறாக காவிரி மேற்பார்வைக்குழுவை அமைப்பதிலேயே மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் மார்ச் 30ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு உறுப்பினர்கள் இந்த அவசர கூட்டத்தில் தவறாமல் பங்குபெற வேண்டும் என்றும் பேராசிரியர் அன்பழகம் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செயற்குழு கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications