சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கும் முன்னரே ஜெ.க்கு வாழ்த்து- நிகழ்ச்சி நிரல் மீறல்: ஸ்டாலின் கண்டனம்
சென்னை: தமிழக சட்டசபையில் நிகழ்ச்சி நிரலை மீறி இரங்கல் தெரிவிக்கும் முன்னரே முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதற்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அண்மையில் காலமான முன்னாள் அமைச்சரும், கடையநல்லூர் எம்.எல்.ஏவுமான செந்தூர் பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர் சபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழக சட்டசபை கூடிய முதல் நாளே சபையில் ஜெயலலிதா புகழ் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில், சபையில் முதல் நாளான இன்று, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நிகழ்ச்சி நிரலை மீறி சட்டசபையில் இன்று முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற கூட்டப்பட்ட சபையில் நாதஸ்வர இசை ஒலிக்கப்பட்டது வேதனையளிக்கிறது.
ஜெயலலிதாவை வாழ்த்தி சபாநாயகர் பேசுகிறார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர். சட்டசபை கூடிய முதல் நாளே அவை ஜெயலலிதா புகழ்பாடும் மன்றமாக இருந்ததால் கூட்டத்தொடரின் மற்ற நாட்கள் எப்படி நடைபெறும் என்பதை தெளிவாக கணிக்க முடிகிறது.
நிகழ்ச்சி நிரலை மீறி சபையில் முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.
பூரண மதுவிலக்கு குறித்து திமுக அவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications