ஜவடேகர் மீண்டும் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்.-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும்: குஷ்பு நம்பிக்கை
சென்னை: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம் என மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

அதேபோல் மதிமுக-விடுதலை சிறுத்தைகள்- கம்யூனிஸ்டுகள் இணைந்து மக்கள் நல கூட்டணி இயக்கமாக உருவாகியுள்ளது. அந்த கூட்டணியினர் 2 கட்ட பிரச்சாரத்தையும் முடித்துவிட்டனர். நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மற்ற கட்சிகள் தங்களது நிலைபாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. அந்த வகையில் தேமுதிக எந்த கட்சியோடு கூட்டணி சேருவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாத குழப்பத்தில் திணறி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications